Name:
Location: நாஞ்சில் நாடு, India

நாஞ்சிலன்

Sunday, November 26, 2006

இறையடியார்களுக்கு...

இறையடியான் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் சகோதரர் ஒருவர் அண்மையில் இராமாயணம் பற்றிப் பதிவொன்று இட்டிருந்தார். இந்துத்துவ வெறியர்களின் பதிவுகளின் எதிர்வினைப் பதிவாக இருந்தாலும் அதில் இராமாயணத்தில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் சில கதை நிகழ்வுகளையும் பொருத்தமற்று எழுதிக் குழப்பியிருந்தார்.

அதற்கு எதிர் வினையாக, ஜெயராமன் எனும் பதிவர் 'இஸ்லாமிய ராமாயணம்' என்ற தலைப்பில் ஒரு மறு கட்டுரை வெளியிட அதில் வழக்கம்போல் இந்துமதத் தீவிரவாதிகள் இஸ்லாமின் மீதும் முஸ்லிம்களின் உயிரினும் மேலான, அல்லாஹ்வின் தூதர் மீதும் புழுதியும் சேறும் வாரி வீசியிருந்தனர்.

இந்நிலை யாரால் ஏன் ஏற்பட்டது?

சிந்தித்துப் பார்த்தால் தவறு இறையடியான் என்ற வலைப் பதிவரிடம் என்பது புரியும்.

சினமோ சீற்றமோ கொள்ளாது காய்தல் உவத்தல் இன்றிச் சிந்தித்துப் பார்த்தால் என் கூற்றில் உள்ள உண்மை யாவருக்கும் புரியும்.

இராமாயணம் என்பது இந்தியாவின் சிறந்த காப்பியம். வால்மீகி இராமாயணம், துளஸி இராமாயணம், ஆனந்த இராமாயணம் போன்று கம்பன் எழுதிய இராமாயணம் தமிழ் மொழியின் மிகச்சிறந்த காப்பியம். அதன் மொழியழகும் கவிதைச் சிறப்பும் தமிழர்கள் யாவராலும் போற்றப் படும். இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம். அதை வெளிப்படையாக எழுதவும் செய்யலாம். அதில் தவறில்லை. அல்லாஹ்வின் அருள் மறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் உரிமை உள்ள இவ்வுலகில் ஓர் இலக்கிய நூலை விமர்சிப்பதில் தவறேயில்லை.

ஆனால் ஒரு நூலை விமர்சிக்கப் புகுமுன், குறைந்த அளவு அதன் உள்ளடக்கம் என்ன? அதன் கதை மாந்தர்கள் யாவர்? அவர்களுக்குள் என்ன உறவு அல்லது தொடர்பு என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? பள்ளிக் கல்வியிலேயே இராமாயணம் தேர்வுக்குரிய பாடமாக வைக்கப் பட்டுள்ளது. சாதாரண எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்திருக்கும் ஒரு தகவல் இணையத்தில் வலைப் பதிவு செய்யும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் நம்ப முடியவில்லை.

இறையடியான் எவ்வித ஆய்வும் தெளிவுமின்றிப் பதித்த ஒரு பதிவினால் தமிழ் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கைபிசைந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வலையில் பதியும் இறையடியார்களே! உங்கள் சிந்தனைக்குச் சில..

இணையத்தில் ஓர் ஆக்கத்தைப் பதிவேற்ற எண்ணினால் அதற்கு முழு வடிவம் கொடுத்தபின் ஒரு முறைக்கு இருமுறை படித்து வேண்டிய திருத்தங்கள் செய்து பதிக்க வேண்டும். அதுவும் மேற்படியார் பதிந்துள்ளபடி விவாதத்துக்குரிய செய்திகளை மிகவும் கவனத்துடன் ஆதாரங்களைத் தேடிப் படித்துப் பின் பதிக்க வேண்டும். நாம் விமர்சிக்கப் புகும் நூலில் இருந்து அகச்சான்றுகள், அதற்கு வலுவேற்றும் புறச்சான்றுகள், பிற ஆய்வு நூலாதாரங்கள், வரலாற்று மற்றும் தொல்லியல், மானுடவியல் ஆதாரங்கள் இருப்பின் அவை என இப்படி எவையெல்லாம் நம் வாதங்களை வலுவேற்றுமோ அவை எல்லாம் தேடப்பட வேண்டும். சான்றாக, பாப்ரி மஸ்ஜித் விஷயமாக எழுதப் புகுந்தால் மேம்போக்காக எழுதாமல் மேற்சொன்ன அனைத்துவகைச் சான்றுகளையும் தரவுகளையும் தொகுத்து எழுதினால் அதன் பொலிவே தனிதான்.

ஆனால் அப்படி எந்த முயற்சியிலும் ஈடுபட்டதாக இறையடியானது எழுத்திலிருந்து புலப்படவில்லை. எந்த நூலையும் ஆய்வு நோக்கில் படித்து எழுதியதாகவும் தெரியவில்லை. எதோ ஒரு நூலை அவசரமாகப் படித்து அல்லது ஓர் ஒலிநாடாவைக் கேட்டு அல்லது கேட்டவர் சொல்லக் கேட்டு அவசரமாகப் பதித்து 'பேஸ்த்' ஆகி நிற்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இதைத்தான், "தடி கொடுத்து அடி வாங்குவது" என்பர்.

"கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப் பிடி கொடுக்கக் கூடாது." இவரது சறுக்கலை வைத்தே ஜல்லியடித்துள்ள கூட்டம் இதை மெய்ப்பித்துவிட்டது.

பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்டாதீர்கள்; இதன் மூலம் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் என்று அல்லாஹ் தன் அருள்மறையில் சொன்னதற்குச் சரியான சான்றாகி விட்டார் இறையடியான்.

ஒரு கருத்தைச் சொன்னால் எதிரி வாயடைக்கும் வண்ணம் சொல்ல வேண்டும்.

மாறாக, அரைகுறைச் செய்திகளுடன் பதிவிட்டால் இந்துத்துவ வெறியர்களிடம் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டதைப்போல் வாங்க வேண்டிய நிலைமை வரலாம்.

நாம் விமர்சிக்கும் எதிரிகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்ற எண்ணம் இருந்தால்தான் வாதங்களில் தெளிவும் வலுவும் ஏற்படும். மத்ஹபு, தர்கா, தரீக்கா என மேம்போக்காக வாதிடுவதுபோல் எண்ணி, அள்ளித் தெளித்த அவசரக் கோலம் அலங்கோலப் பட்டுவிட்டது.

எழுத்தில் சூடு இருப்பதை விடத் தேவையானது மறுக்கவியலா ஆதாரம். காளையொன்று கன்றீன்றது எனக் கூறக் கேட்டால் கறப்பதற்குச் சொம்புடன் ஓடக்கூடாது.

"நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் கூறுகின்றபடி, நீங்கள் எழுத விரும்பும் செய்தி பற்றி மேல் விபரங்களை, அதுபற்றி அறிந்தவர்களிடம் கேட்கலாம்; முழுவடிவம் கொடுக்கும் முன் அத்தகைய அறிஞர்களிடம் காட்டலாம்.

பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடுவதற்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட தளம், மன்றம், அரங்கம் பற்றியும் அங்குள்ள விதிகள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம். இல்லையேல், மூக்கறுப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தைப் பொதுவில் கொண்டு செல்லும் முன் இதனால் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மையா என்பதை முதலில் சிந்தித்துப் பார்த்துவிடுவது நலம்.

இரண்டாவதாக, கொண்டு செல்லும் குறிப்பிட்ட அந்த இடமும் சூழ்நிலையும் அதற்கு ஏற்றவையா என்பதையும் முடிவு செய்யவேண்டும்.

எதிர்வினைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதற்கான நேரம் ஒதுக்கும் வாய்ப்பு தமக்கு இருக்கிறதா என்பதை முடிவு செய்த பின்னரே இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது நலம்.

ஏதாவது ஓர் அறிஞரின் கருத்தைத் தம் ஆக்கத்தில் மேற்கோளிட்டுவிட்டு, எதிர்வினை வரும்போது இதற்கு நான் முழுதும் உடன்படவில்லை என்றோ அல்லது அந்த அறிஞரிடம்தான் கேட்க வேண்டும் என்றோ சொல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாமல், தாமே எதிர்வினைகளை எதிர்கொள்வதற்காக, உடன்பாடான, தெரிந்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்துவதே நல்லது.

இணையதளத்தில் இதன் குறிப்புகளோ அல்லது மூலமோ இருக்குமாயின், அவசியம் சுட்டி கொடுக்கப்பட வேண்டும்.

எழுத்துநடை எளிமையாகவும் தெளிவாகவும் அமைய வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதற்காகப் பாமர வாசகனுக்கு எளிதில் புரியாத பெரிய பெரிய சொற்களைப் போட்டு மிரட்டக்கூடாது. கூறியது கூறல் கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அதற்காகக் குன்றக் கூறவும் கூடாது; மிகைப் படுத்தவும் கூடாது. சொல்ல வந்த செய்தியை விட்டுவிட்டு வேறொரு செய்திக்குத் தாவவும் கூடாது.

சுருங்கக் கூறின், ஓர் ஆக்கம் என்பது, 'மனித குலத்தின் மேன்மைக்கும் அமைதிக்கும் உரிய வழி'யின்அழைப்பாக இருக்க வேண்டும்.

15 Comments:

Blogger ╬அதி. அழகு╬ said...

தெளிந்த அறிவுரை.

ஏற்று நடப்பார்களா இறையடியான்கள்?

9:52 PM, November 26, 2006  
Blogger வாசகன் said...

அன்பின் அபூ முஹை,

மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு இது.
முஸ்லிமாகவும் தமிழராகவும் இருக்கும் உணர்வின் முனைப்பில் இப்பதிவு வெளிப்பட்டிருக்கிறது. 'இறையடியானாக' இருக்க நினைப்போர் நெஞ்சில் நிறுத்தவேண்டிய கருத்து.நாஞ்சில் நாட்டு புதுச்சுவடிக்கு வாழ்த்துகள்.

பொதுவாக, பிறமத புனிதங்கள் மீது முஸ்லிம்கள் காழ்ப்புணர்வால் தாக்குதல் நடத்துவதில்லை. இறைவனே தடுத்துள்ளது முக்கிய, முதன்மைக் காரணம் என்றால் காழ்ப்புணர்வின் அவசியங்கள் முஸ்லிம்களுக்கில்லை என்பதும் பக்கக் காரணம். ஏனென்றால், எத்தனை வாய்கள் கூடி ஊதினாலும் இஸ்லாமிய தீபம் அணைந்துவிடாது. ஊதுவதில் வெளிப்படுவது அந்த அற்ப வாய்களின் துர்நாற்றங்களே.

12:11 AM, November 27, 2006  
Blogger Jafar ali said...

இணையத்தில் உலா வரும் அனைத்து முஸ்லிம் வலைப்பதிவர்களும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அருமையான வழிமுறைகளை கூறி இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!

3:29 AM, November 27, 2006  
Blogger வணங்காமுடி said...

புதுச்சுவடி விரித்துள்ள நாஞ்சிலன் ஐயா!

//இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம்//

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

பகுத்தறிவாளர்களுக்கு ராமாயணக் கருப்பொருள் மீது மட்டுமில்லை- அதன் கதைத் தலைவன் ராமன் மீதும் கடுத்த விமர்சனம் உண்டு.

அவன் பெயரால்தானே இந்தியாவில் இரத்த ஆறு ஓட்டப் படுகிறது.

அவன் பெயரால்தானே சிறுபான்மை முஸ்லிகளும் கிருத்தவர்களும் மிரட்டப்படுகின்றனர்.

"ராமனைத் தங்கள் லட்சிய புருஷனாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டால் இந்த நாட்டில் வகுப்புக் கலவங்கள் வராது" என்று 20/06/1971ஆம் நாள் இன் ஆர்கனைஸர் பத்திரிக்கை கூறியது.

ராமன் ராவணனை வெற்றிகொண்ட நாள் என்று R.S.S.நம்பும் விஜயதசமி நாளில் 1925 ஆம் ஆண்டு R.S.S. ஆரம்பிக்கப் பட்டது. அவன் பிறந்த நாள் என்று அவர்கள் நம்பும் ராமநவமி நாளில் R.S.S. கொடி ஏற்றப் பட்டது.

இந்தியாவை இந்துராஷ்ட்டிரமாக்க ராமனின் பெயராலேயே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அவன் பெயராலேயே முஸ்லிகளின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளன.

ஐயாவின் தொண்டர்கள் 1971 ல் சேலத்தில் அவன் படத்தைச் செருப்பால் அடித்தது சரியான செயல்தான் என்று இன்று நிரூபனம் ஆகிறது.

9:26 AM, November 27, 2006  
Blogger புதுச்சுவடி said...

அன்பிற்குரிய பெரியவர் அழகு மற்றும் நண்பர் ஜாஃபர் அலீ,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சகோதரர் அபூ முஹை!

புதுச்சுவடியை உங்கள் வலைப்பூவில் மீள் பதிவு செய்துள்ளீஈர்கள். நன்றி.

உங்கள் வலைப்பூவுக்கு வந்த ஒரு பின்னூட்டம் புதுச்சுவடிக்கும் வந்தது. அதையும் அனுமதித்துள்ளேன்.

9:33 AM, November 27, 2006  
Blogger வாசகன் said...

புதுச்சுவடி அவர்களுக்கு...
உங்கள் பதிவைக் காண அபூமுஹை அவர்களின் பதிவின் வழியே வந்திருந்தேன். முதலில் அபூமுஹையின் பதிவுக்கு கருத்தளிக்க வந்து.. விளி மாற்றாமல், அன்பின் அபூமுஹை என்று முந்தைய பின்னூட்டத்தில் விளித்துவிட்டேன். பொறுத்துக்கொள்ளுங்கள்

9:35 AM, November 27, 2006  
Blogger பூமராங் said...

.
1// ராமாயணத்தில் மாய மானாக வருவது மாரீசன்தான். ஆனால்
கடவுள் இராமனால் சாதாரண மாரீசன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை அவர் எப்படி கடவுள்? //

என்று, ஜெயராமனின் பதிவில் பழைய தி.க.காரர் கேட்டிருந்த பின்னூட்டக் கேள்விக்கு, ஜெயராமன் சொன்ன பதில்:-

"ஆத்மானம் மானுஷம் மன்யே" - நான் என்னை மனிதனாகவே என்னுகிறேன் என்று இராமன் சொல்கிறான் இராமாயணத்தில். அவன் மனிதவேடம் போட்டதால் மனிதன் போலதான் "ஆக்ட்" கொடுக்க வேண்டும்."


இப்படி ஆக்ட் குடுத்ததால்தான் பெண்களின் முலையையும் மூக்கையும் அரிந்து மானபங்கப் படுத்தினான்.

தான் மணந்து தனக்கு இரு மக்களைப் பெற்றுத் தந்த சீதையை, வழிப்போக்கன் சொல்லைக் கேட்டுத் தீயில் தள்ளினான்.

இவனைத்தான் லட்சிய புருஷனாக ஏற்க வேண்டுமாம்.

தூ..

ராமன் நம்மை விடத் தாழ்ந்த மனிதன். நம்மை விடச் சிறந்த மனிதர்களான காந்தி. பெரியார் போன்றோரையாவது லட்சிய புருஷர்களாகச் சொல்லலாம். ஆனால் ராமன்..

10:05 AM, November 27, 2006  
Blogger அபூ முஹை said...

புதுச்சுவடி உங்களின் இந்தக் கட்டுரை நல்ல ஆக்கப்பூர்வமான அறிவுரையாக இருந்தது. அதனாலேயே என் பதிவில் மீள் பதிவு செய்தேன் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

10:12 AM, November 27, 2006  
Blogger இறையடியான் said...

சிலதுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காக ஆத்திரத்தில் அறிவிழந்து தான் போனேன்.

இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறமாட்டேன் என நம்புகின்றேன்.

நண்றி

9:10 PM, November 27, 2006  
Blogger புதுச்சுவடி said...

வணங்காமுடி, பூமராங்!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தாங்கள் கூறியுள்ளவற்றுள் சில எங்களுக்கு உடன்பாடற்றவை. என் பதிவில் சுட்டியுள்ளபடிப் பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்ட எங்கள் மார்க்கம் தடைசெய்துள்ளது.

பெரியாரிஸ்டுகளான உங்கள் வேகத்துக்கு நாங்கள் இல்லை. எங்களுக்கு வேகத்தடை உண்டு.

பாருங்கள்

யார் பொருட்டால் நான் இவ்வாக்கத்தைப் பதிவு செய்தேனோ அந்தச் சகோதரர் இறையடியான் தம் சறுக்கலை உணர்ந்து இனித் தடம் மாறமாட்டேன் என்று கூறியுள்ளாரே! இதுதான் எங்கள் மார்க்கம் காட்டி(கற்று)த் தந்த வேகத்தடையின் மெய்ச்சான்று.

என் சகோதரன் இறையடியான்!

உங்கள் பொருட்டால் முஸ்லிம்களை முன்னிலைப் படுத்தி நான் பதித்த ஆக்கத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. இவ்வறிவுரை முஸ்லிம்களுக்கு மட்டுமன்று; சாதி, மத, இன, வேறுபாடின்றிச் சிந்திக்கும் ஆற்றலுள்ளோர் அனைவர்க்குமாம்.

யாரையும் நோகச் செய்யவோ காயப்படுத்தவோ இதைப் பதியவில்லை. தங்களின் புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி.

7:18 AM, November 28, 2006  
Blogger Abdul Samed said...

சகோதரர்களே!

பதிவின் நோக்கம் சாதி, மத, இன, வேறுபாடின்றி அனைவரையும் சிந்திக்கும் படி அமைய வேண்டும். யாரையும் நோகச் செய்ய கூடாது.

அன்புடன்
கவிதாசன்
http://centamil.blogspot.com

9:42 AM, December 07, 2006  
Blogger புதுச்சுவடி said...

வருக அப்துஸ்ஸமத்.

நல்ல கருத்தைச் சொல்லியுள்ளீர்கள்.

இது எல்லா வலைப் பதிவர்களும் புரிந்து கொள்ல வேண்டிய ஒன்று.

"அப்துஸ்ஸமத்" -

"பிறர் எவரிடமிருந்தும் எந்தத் தேவையுமற்றவனின் அடிமை" என்று அழகிய அர்த்தமுள்ள பெயரைக் கொண்டுள்ள நீங்கள் "கவிதாஸன்" என்ற பெயரை ஏன் தெரிந்தெடுத்தீர்கள்.

"தாஸன்" என்ற வடமொழிச் சொல்லின் பொருள் அடிமை என்றாகும்.

ராமதாஸ் ராமனின் அடிமை

காளிதாஸன் காளியின் அடிமை.

நீங்கள் ஸமதின் அடிமையே தவிர கவியின் அடிமை அல்லர்.

வேண்டுமெனில் கவிராஜன் என்றோ கவிப்ரியன் என்றோ பெயர் வைத்துக் கொள்ளுங்களேன்.

10:07 AM, December 07, 2006  
Blogger Unknown said...

சிறந்த பதிவு. எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள் - குறிப்பாக முஸ்லீம் பதிவர்களுக்காக தந்தது சிறப்பு.
உங்கள் வரவு நல்வரவாகுக.

3:02 AM, April 11, 2007  
Blogger புதுச்சுவடி said...

வருக ஸுல்தான் பாய்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

8:22 AM, April 12, 2007  
Anonymous Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நானும் புதிதாக இணையத்தில் பதிவு இட துவங்கியுள்ளேன். ஆங்கிலத்தில் கிடைக்கும் நல்ல கட்டுரைகளையும், பதிவுகளையும் தமிழ் பேசும் உம்மத்தினருக்கு கிடைத்திட செய்ய வேண்டும் என்பதே அவா. உங்களின் இந்தப் பதிவு, இணையத்தில் புதிதாய் இஸ்லாத்தை பரவிட முயலும் பதிவர்களுக்கு நல்லுபதேசம். என்னிடத்திலும் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும். ஜஸாகல்லாஹு கைர்.

sister in islam,
http://iniyaislam.wordpress.com

9:11 PM, March 17, 2008  

Post a Comment

<< Home